திருவண்ணாமலையில் உள்ளூர் மக்களுக்கு கட்டுப்பாடு – வெளிமாநில கார்களுக்கு மட்டும் கோயில் வரை அனுமதியா? ராஜாராம் கேள்வி

Date:

திருவண்ணாமலையில் உள்ளூர் மக்களுக்கு கட்டுப்பாடு – வெளிமாநில கார்களுக்கு மட்டும் கோயில் வரை அனுமதியா?
தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ராஜாராம் கேள்வி

திருவண்ணாமலையில் உள்ளூர் வாசிகளின் கார்களுக்கு பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் மட்டும் கோயில் வரை அனுமதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என தமிழக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழக முன்னேற்றக் கழக மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜாராம், மாவட்டத்தில் நிலவும் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலையில் கிரிவலம் மற்றும் கோயில் பகுதியைச் சுற்றி உள்ளூர் மக்களின் கார்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் பல இடங்களில் நிறுத்த அனுமதி மறுக்கப்படுவதோடு, கோயில் வரை செல்லவும் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், வெளிமாநில பதிவெண் கொண்ட கார்களுக்கு மட்டும் எந்த தடையும் இல்லாமல் கோயில் வரை செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இது எப்படி நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “உள்ளூர் மக்களே தங்கள் சொந்த ஊரில் வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில வாகனங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவது, நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலையில் போக்குவரத்து ஒழுங்குமுறை என்ற பெயரில் பொதுமக்கள் தேவையற்ற சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும், குறிப்பாக மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ராஜாராம் தெரிவித்தார்.

இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கும் வெளிமாநில பயணிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திருவண்ணாமலை போன்ற முக்கிய ஆன்மிகத் தலத்தில், நிர்வாகத் தவறுகள் பக்தர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏற்படுத்தக் கூடாது என்றும், அனைவருக்கும் சமமான அணுகுமுறை அவசியம் என்றும் தமிழக முன்னேற்றக் கழகம் சார்பில் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

விஜய்யின் டிவிசி – வடசென்னை மற்றும் இரட்டைத் தொகுதி வியூகம்! சீமானின் ஆட்சி முறைமை…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி விஜய்யின் டிவிசி (TVK) கட்சியின்...

2026 தேர்தல்: சமீபத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் ‘மெகா’ கூட்டணி மாற்றங்கள்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்புகள்...

அதிமுகவின் ‘மெகா’ தேர்தல் அறிக்கை: விஜய் ஏற்படுத்தப்போகும் தாக்கம்… ஈபிஎஸ்-ஸின் பதிலடி!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை மற்றும்...

2026 தேர்தல் களம்: எடப்பாடி பழனிசாமியின் ‘பதிலடி’ வியூகமும், தொகுதி வாரியான கணிப்புகளும்!

அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, கள நிலவரப்படி தொகுதி...