திருப்பரங்குன்றம் விவகாரம் – தமிழக அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்
கோவையில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் கோட்டீஸ்வரராவ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்துப் பேசப்பட்டதுடன், அரசை எதிர்த்து மொத்தம் ஐந்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.