போரூரில் மனைவி கொலை – கணவர் கைது

Date:

போரூரில் மனைவி கொலை – கணவர் கைது

சென்னை போரூர் பகுதியில், மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போரூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு, தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தை குறித்து சந்தேகம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அடிக்கடி தம்பதிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுபோதையில் இருந்த சத்யராஜ், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த கயிற்றைப் பயன்படுத்தி ரோஸ்மேரியின் கழுத்தை இறுக்கியும், அவரது தலையை சுவரில் மோதியுமாக கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரோஸ்மேரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சத்யராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா கோலாகலம்

‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா கோலாகலம் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி...

அசாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் 11 லட்சம் பெயர்கள் நீக்கம்

அசாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் 11 லட்சம் பெயர்கள் நீக்கம் அசாம் மாநிலத்தில்...

திருப்பரங்குன்றம் விவகாரம் – தமிழக அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்

திருப்பரங்குன்றம் விவகாரம் – தமிழக அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் கோவையில்...

நூர் கான் விமானப்படை தள தாக்குதல் – இந்திய ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் ஒப்புதல்

நூர் கான் விமானப்படை தள தாக்குதல் – இந்திய ராணுவ நடவடிக்கையை...