பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் பகுதியில் மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில், செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
எடை பிரிவுகளின்படி நடத்தப்பட்ட போட்டியில், பலர் தங்களது உடற்கட்டமைப்புகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.