சென்னை–கொச்சி விமான கட்டணம் மும்மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி

Date:

சென்னை–கொச்சி விமான கட்டணம் மும்மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி

சென்னையிலிருந்து கொச்சி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் திடீரென மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜனவரி 20ஆம் தேதி வரை கேரளாவிற்கு செல்லும் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், சென்னையிலிருந்து கொச்சி செல்லும் விமானங்களின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.3,681 ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ.11,500 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நேரடி விமானம் கிடைக்காத நிலையில், பெங்களூரு வழியாக கொச்சி செல்லும் இணைப்பு விமானங்களுக்கு ரூ.17,000-க்கும் மேற்பட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தினமும் நான்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் விமான சேவைகளை வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் விமான நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையார்பட்டி கோயில் நிதி முறைகேடு : விசாரணைக்கு ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற உத்தரவு

பிள்ளையார்பட்டி கோயில் நிதி முறைகேடு : விசாரணைக்கு ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற...

இந்தியருக்கு உரிய சிகிச்சை வழங்காத கனடா மருத்துவமனை – உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு

இந்தியருக்கு உரிய சிகிச்சை வழங்காத கனடா மருத்துவமனை – உயிரிழப்புக்கு காரணம்...

அமெரிக்காவில் ஊழியர்களுக்கு ரூ.2,155 கோடி போனஸ் வழங்கிய தொழிலதிபர் – பாராட்டைப் பெற்ற மனிதநேய செயல்

அமெரிக்காவில் ஊழியர்களுக்கு ரூ.2,155 கோடி போனஸ் வழங்கிய தொழிலதிபர் – பாராட்டைப்...

தருமபுரி: காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல்

தருமபுரி: காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல் தருமபுரி மாவட்டம்...