திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Date:

திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் சுமார் 7,500 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், கடந்த நான்கு மாதங்களாக காவல்துறை தலைமை இயக்குநரை நியமிக்க முடியாமல் தமிழக அரசு சிரமம் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலா ரூ.40 கோடி வரை பணம் குவித்து வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக, மத்திய அரசுடன் முரண்பட்டதுதான் தற்போது எஞ்சியிருப்பதாகவும் அவர் கூறினார்.

வரவிருக்கும் தேர்தலில் 200 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் நயினார் நாகேந்திரன் வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுகவுக்குப் பலமா? பளுவா? – ஓ.பன்னீர்செல்வம் அரசியல் நகர்வின் முழுத் தரவுகள் – ஒரு விரிவான அலசல்

திமுகவுக்குப் பலமா? பளுவா? - ஓ.பன்னீர்செல்வம் அரசியல் நகர்வின் முழுத் தரவுகள் முன்னாள்...

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட 23 பேர் விடுதலை!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட...

சஹாரா பாலைவனத்தில் ‘காப்பான்’ பட பாணியில் வெட்டுக்கிளிப் படைத் தாக்குதல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சஹாரா பாலைவனத்தில் 'காப்பான்' பட பாணியில் வெட்டுக்கிளிப் படைத் தாக்குதல்: வாகன...

“ஓபிஎஸ்-இன் திமுக சேர்க்கை அந்த கட்சிக்கே பாதகமாக அமையும்” – தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம்!

"ஓபிஎஸ்-இன் திமுக சேர்க்கை அந்த கட்சிக்கே பாதகமாக அமையும்" - தமிழிசை...