கடலூர் சாலை விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Date:

கடலூர் சாலை விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள், பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்த போது அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்களின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர், அந்த 6 பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜரத்தினம், ராஜேஸ்வரி மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!

2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில்...

“வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் மனு!

"வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்" -...

“நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை” – சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு மத்திய அமைச்சர் உத்தரவு!

"நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை" - சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு...

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: துபாயில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது “Uber Air” சேவை!

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: துபாயில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது “Uber...