ஸ்ரீநகரில் 24 மணி நேர இடையற்ற மின்சாரம் வழங்கல்
ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், நாளும் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஓமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், புனரமைக்கப்பட்ட மின் விநியோகத் துறைத் திட்டத்தின் சோதனை இயக்கம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீநகரில் மேலும் 83 பகுதிகள் 24 மணி நேர மின் விநியோக திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய முன்னேற்றத்திற்காக மின் விநியோகக் கழகத்திற்கு முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.