எம்ஜிஆர் நினைவு தினம்: இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Date:

எம்ஜிஆர் நினைவு தினம்: இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அந்த வரிசையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம் என்ற உறுதியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வி.கே. சசிகலா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி...

போளூர் பகுதியில் மணல் கடத்தல் – திமுக நிர்வாகி மீது மக்கள் குற்றச்சாட்டு

போளூர் பகுதியில் மணல் கடத்தல் – திமுக நிர்வாகி மீது மக்கள்...

சபரிமலை பதினெட்டாம் படியில் சேதமும் கொள்ளையும் – பாஜக தலைவர் கடும் குற்றச்சாட்டு

சபரிமலை பதினெட்டாம் படியில் சேதமும் கொள்ளையும் – பாஜக தலைவர் கடும்...

வங்கதேச தேர்தல் களம்: பிரதமர் கனவுடன் நாடு திரும்பும் கலீதா ஜியாவின் மகன்

வங்கதேச தேர்தல் களம்: பிரதமர் கனவுடன் நாடு திரும்பும் கலீதா ஜியாவின்...