இடுவாய் கிராமத்தை கருப்பு நாளாக மாற்றியதாக காவல்துறைக்கு குற்றச்சாட்டு

Date:

இடுவாய் கிராமத்தை கருப்பு நாளாக மாற்றியதாக காவல்துறைக்கு குற்றச்சாட்டு

இடுவாய் கிராமத்தில் நடந்த சம்பவம் காரணமாக அந்த நாளை காவல்துறையினர் கருப்பு தினமாக மாற்றியுள்ளதாக, பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இடுவாய் ஊராட்சியின் கீழ் வரும் சின்ன காளிபாளையம் பகுதியில், குப்பைகளை அகற்ற வந்த மாநகராட்சி வாகனங்களை எதிர்த்து பொதுமக்கள் ஒன்று திரண்டு, அவற்றைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், போராட்டத்தில் பங்கேற்ற மக்களை காவல்துறையினர் ஒரே நேரத்தில் கைது செய்ய முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், பொதுமக்களும் காவலர்களும் சேர்த்து மொத்தம் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், பொதுமக்கள் மீது போலீசார் மேற்கொண்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், இடுவாய் கிராமம் காவல்துறையினரால் கருப்பு நாளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...