• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Big-News

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான பின்னணி

athibantv by athibantv
டிசம்பர் 16, 2025
in Big-News, World
0
📢 WhatsApp Channel Join
👁️ 380 📋

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான பின்னணி

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி, ‘விஜய் திவஸ்’ என தேசிய அளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் வரலாற்றுச் சம்பவங்கள் என்ன என்பதை இச்செய்தி தொகுப்பு விளக்குகிறது.

1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர், இந்திய ராணுவ வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்த ஒரு தீர்மானகரமான யுத்தமாகக் கருதப்படுகிறது. இந்தப் போரின் முடிவில், டிசம்பர் 16 அன்று, பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 93 ஆயிரம் வீரர்கள் இந்திய படைகளிடம் சரணடைந்தனர். இந்த வெற்றியின் விளைவாக, கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் என்ற புதிய சுயாதீன நாடு உருவானது.

Related posts

மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சம்: ஒரு சவரன் ₹1.23 லட்சத்தை தாண்டியது!

மே 13, 2026
தமிழகத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சட்டமன்றத்தில் சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

மே 13, 2026

இந்த வரலாற்றுப் பெருமைமிக்க வெற்றி எளிதில் கிடைத்த ஒன்றல்ல. அதற்குப் பின்னால் பல இந்திய வீரர்களின் அபார தைரியமும், உயிர்த் தியாகமும் இருந்தன.

சமீப காலமாக வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் இந்திய உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் தைரியமான செயல்பாடுகளை எடுத்துரைத்துள்ள நிலையில், 1971 போர் காலத்திலும் இதுபோன்ற பல துணிச்சல்மிக்க வீரர்கள் நாட்டின் வெற்றிக்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்ததை நினைவுகூர வேண்டிய தருணம் இது.

அத்தகைய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் லெஃப்டினண்ட் கர்னல் பவானி சிங். அவரது தலைமையிலான சிறிய படைப்பிரிவு, பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 80 கிலோமீட்டர் ஆழமாக நுழைந்து, 20 எதிரி வீரர்களைச் சிறைபிடித்தது. இந்த நடவடிக்கை இந்திய வெற்றிக்கான முக்கியத் தளமாக அமைந்தது.

மொத்தமாக 13 நாட்கள் மட்டுமே நீடித்த இந்தப் போர், டிசம்பர் 3 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை இந்திய விமானத் தளங்களைத் தாக்கியதன் மூலம் தீவிரமடைந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழு அளவிலான போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குறிப்பாக கிழக்கு பாகிஸ்தானில் இந்திய படைகள் வேகமாக முன்னேறின.

இந்த முழுப் போர்திட்டத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தியவர் ஃபீல்டு மார்ஷல் சாம் மானேக்ஷா. அவரது உறுதியான முடிவுகளும், கூர்மையான ராணுவத் தந்திரங்களும் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்தன. அவரது வாழ்க்கை வரலாறு ‘சாம் பஹதூர்’ என்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல், கிழக்கு பாகிஸ்தானில் 4வது படைப்பிரிவை வழிநடத்திய ஜெனரல் சாகத் சிங், தலைமையின் சில உத்தரவுகளை மீறி, ஹெலிகாப்டர்கள் மூலம் மேக்னா ஆற்றைக் கடந்து திடீர் தாக்குதல் நடத்தினார். இதன் மூலம் வெறும் 36 மணி நேரத்தில் 4,000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் எதிரி நிலப்பகுதிக்குள் நுழைந்தனர். இந்த எதிர்பாராத தாக்குதல் பாகிஸ்தான் படைகளை நிலை குலையச் செய்தது.

இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில், வெறும் 21 வயதான 2ம் லெஃப்டினண்ட் அருண் கேதர்பால், பல எதிரி டாங்கிகளை அழித்து, பாகிஸ்தான் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தினார். கடுமையாக காயமடைந்த நிலையிலும் போர்க்களத்தை விட்டு விலக மறுத்த அவரது வீரச்செயல் இந்திய வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

மேலும், கிழக்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தளபதியாக இருந்த லெஃப்டினண்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா, டாக்கா நகரை நான்கு திசைகளிலும் முற்றுகையிட்டு பாகிஸ்தான் படைகளை முழுமையாக சரணடையச் செய்தார். பாகிஸ்தான் தளபதி நியாஸி சரணடைந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட தருணத்தில், அருகில் இருந்த இந்திய தளபதி ஜக்ஜித் சிங் அரோராதான்.

இவ்வாறு, 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16, இந்திய ராணுவத்தின் வலிமையும், வீரர்களின் தியாகமும் உலக அரங்கில் ஒலித்த நாளாகப் பதிந்தது. அந்த மகத்தான வெற்றியை நினைவுகூரும் வகையில், இந்தியா ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை ‘விஜய் திவஸ்’ எனக் கொண்டாடி, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

தொடர்ந்து சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 4 பேர் பலி

Next Post

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்

Next Post

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!

அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!

மே 13, 2026
சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!

சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!

மே 13, 2026
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

மே 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!
  • சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!
  • ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!

அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!

மே 13, 2026
சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!

சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!

மே 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN