குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹாரம்: “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

Date:

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹாரம்: “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் காளி, ஜெய்காளி”, “வெற்றி அம்மனுக்கே” என முழக்கமிட்டு அம்மன் தரிசனம் செய்தனர்.

இந்தியாவில் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினம் தசரா விழா மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து வேடமணிந்து வீதி வீதியாகச் சென்று காணிக்கை வசூல் செய்து, தாயாரை வணங்கினர்.

விழாவின் உச்சநிலையான மகிஷாசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்குப் பின் கடற்கரையில் நடந்தது. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன், பல்வேறு வேடங்களில் வந்த மகிஷாசூரனை வதம் செய்தார். அந்த வேளையில் கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் தாயாரின் அருளைப் பெற்றனர்.

இதையடுத்து கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், அபிஷேக மேடை, கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் நிறைவாக, நாளை (அக். 23) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப் பரத்தில் திருவீதியுலா புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைவார். அதன் பின்னர் பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை நிறைவு செய்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

பெரும் பக்தர்கள் திரளைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். பாதுகாப்பு பணியில் டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி, எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் 3,500 போலீஸார் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி – ஓமன் பயணம் முக்கிய கட்டத்துக்கு!

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி – ஓமன் பயணம்...

பறை இசையில் இணைந்து ஆனந்தம் பகிர்ந்த ஆளுநர் ஆர்.என். ரவி!

பறை இசையில் இணைந்து ஆனந்தம் பகிர்ந்த ஆளுநர் ஆர்.என். ரவி! விருதுநகர் மாவட்டத்தில்...

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு திருப்பரங்குன்றம் தொடர்பான...

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்!

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்! மத்திய அரசு சமீபத்தில்...