100 நாள் வேலை திட்டத்திற்கு புதிய பெயர் – மத்திய அரசு முடிவு

Date:

100 நாள் வேலை திட்டத்திற்கு புதிய பெயர் – மத்திய அரசு முடிவு

பொதுமக்கள் மத்தியில் “100 நாள் வேலை” எனப் பரவலாக அறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 15 கோடி கிராமப்புற மக்கள் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் இந்தத் திட்டம் “தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் 2009 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பெயர் இணைக்கப்பட்டு “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்” என மறுபெயரிடப்பட்டது. தற்போது, இத்திட்டத்தை “பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கார் யோஜனா” என்ற புதிய பெயரில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பெயர் மாற்றத்திற்கான சட்ட மசோதா நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேசமயம், புதிய மசோதாவின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கையை 100இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, கூடுதலாக 1.50 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் கணவர் கைது

**மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் கணவர் கைது மூளை கைரேகை...

பிறப்பு விகித உயர்வுக்காக கருத்தடை பொருட்களுக்கு வரி உயர்த்தும் சீனா

பிறப்பு விகித உயர்வுக்காக கருத்தடை பொருட்களுக்கு வரி உயர்த்தும் சீனா மக்கள் தொகை...

சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த...

பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர...