• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பாகிஸ்தான் குழம்புமா? — சிந்துதேசம் தனிநாடு கோரிக்கை மீண்டும் தீவிரம்

athibantv by athibantv
டிசம்பர் 12, 2025
in Big-News, World
A A
0
👁️ 859

பாகிஸ்தான் குழம்புமா? — சிந்துதேசம் தனிநாடு கோரிக்கை மீண்டும் தீவிரம்

பஞ்சாப் பகுதியில் “சிந்துதேசம் தனிநாடு வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற பேரணியில் வன்முறையால் பதட்டம் ஏற்பட்டது. சிந்தி மக்கள் ஏன் இவ்வாறு பிரிவு கோரிக்கையை வலுப்படுத்துகிறார்கள்? என்ன காரணங்கள் பின்னணியாக உள்ளன? என்பதை விளக்கும் செய்தி தொகுப்பு.

தார் பாலைவனமும், சிந்து நதியும் ஒட்டிய பகுதியான சிந்து, பாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியை உருவாக்கும் முக்கிய மாகாணம். இதன் தலைநகரம் கராச்சி. பாகிஸ்தானின் 3வது பெரிய மாகாணமான சிந்துவில் தற்போது சுமார் 5.5 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

ஒருகாலத்தில் பெரும்பாலான சிந்தி மக்கள் வாழ்ந்த இப்பகுதியில், இப்போது 94%–க்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். பண்டைய பாரதத்தின் முக்கிய மையமாக இருந்த சிந்து, உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்தைத் தங்கிய பகுதியாக வரலாற்றுப் புகழ்பெற்றது.

ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடமாக இருந்த சிந்துதேசம், அக்னிபுராணம், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முகமது பின் காசிமின் படையெடுப்பிற்கு முன் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். பிரிவினை நேரத்தில் இந்த நிலப்பகுதி பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டபோது, பல லட்சம் சிந்தி மக்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்நாட்டு சிந்தி மக்கள் பல தசாப்தங்களாக, மொழித் திணிப்பு, மத பாகுபாடு, பெண்கள்மீது வன்முறை, பொருளாதார அநீதி போன்ற காரணங்களால் அடக்குமுறைகளை எதிர்கொண்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த சூழலில், சிந்தி மக்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

RelatedPosts

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்ச் 22, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

மார்ச் 21, 2026

1967–ல் முதன்முதலாக சிந்துதேசத்திற்கு சுயாட்சி கோரப்பட்டது. 1971 வங்கதேசப் பிரிவினைக்குப் பிறகு, இந்த கோரிக்கை இன்னும் வலுவடைந்தது. நாடுகடத்தப்பட்ட சிந்தி தலைவர் ஷாஃபி பர்பத் தலைமையிலான ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் (JSMM) அமைப்பு, சிந்துதேசத்தை ஐநா தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.

“சிந்து பாகிஸ்தான் அல்ல. பெரும்பான்மையான மக்களின் சம்மதமின்றி இணைக்கப்பட்ட நிலம்” என்று JSMM குற்றஞ்சாட்டுகிறது. மேலும், பாகிஸ்தானின் மொத்த அரசின் வருவாயில் 63% சிந்து மாகாணத்திலிருந்து கிடைக்கிறது; ஆனால் அதிகாரங்கள் அனைத்தும் பஞ்சாப் மாகாணத்தில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

சிந்து–இந்தியா இடையேயான வரலாற்று, பண்பாட்டு, மத உறவுகளை காரணமாகக் காட்டி, இந்தியாவும் இந்த கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று JSMM பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தது.

சிந்து கலாசார தினத்தை முன்னிட்டு, கராச்சியில் “சிந்துதேசம் தனிநாடு வேண்டும்” என்ற கோஷத்துடன் நடந்த பேரணி பெரும் திரளைக் குவித்தது. பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களும் எழுந்தன.

பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசாருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கற்கள் எறிந்து தாக்குதல் நடத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைச் சிதறடித்தனர். இதில் 5 போலீசார் காயமடைந்தனர்.

கடந்த நவம்பரில் நவ்தில்லியில் நடந்த விழாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “சிந்து பகுதி அரசியல் ரீதியாக இந்தியாவிலிராதாலும், வரலாற்று–பண்பாட்டு ரீதியில் இந்தியாவுடன் என்றும் இணைந்த நிலம்” என்று குறிப்பிட்டார். இது வெளியானதும் JSMM அவரை வரவேற்று அறிக்கை வெளியிட்டது.

Related

Tags: World
Previous Post

பேருந்து நிலையத்தில் பரபரப்பு: பயணிகள் ஏற்றும் விவகாரத்தில் அரசு–தனியார் டிரைவர்கள் இடையே மோதல்

Next Post

அமெரிக்காவில் ட்ரம்புக்கு கடும் எச்சரிக்கை: “இந்தியாவை துன்புறுத்தினால் நோபல் கனவு முடிந்தது!”

RelatedPosts

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்ச் 22, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

மார்ச் 21, 2026
பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

மார்ச் 21, 2026
ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

மார்ச் 21, 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

மார்ச் 21, 2026
Next Post
Home

அமெரிக்காவில் ட்ரம்புக்கு கடும் எச்சரிக்கை: “இந்தியாவை துன்புறுத்தினால் நோபல் கனவு முடிந்தது!”

Home

ஆழ்வார்பேட்டையில் குப்பை வாகனத்தில் கார் மோதிய சாலை விபத்து!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.