கர்நாடகா: கார் தீப்பிடித்து எரிந்ததில் காவல் ஆய்வாளர் உயிருடன் எரிந்தார்!
கர்நாடகாவின் தார்வாட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததில் காவல் ஆய்வாளர் உயிருடன் எரிந்தார்.
ஹாவேரி லோக்ஆயுக்தா காவல் ஆய்வாளர் பஞ்சாக்ஷராய சலிமத் ஒரு காரில் கடக் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
காவல் ஆய்வாளர் சலிமத் சம்பவ இடத்திலேயே காரில் உயிருடன் எரிந்தார். திருமண விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது.