பழிவாங்க முனையும் JeM : 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலைப் படை

Date:

பழிவாங்க முனையும் JeM : 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலைப் படை

இந்தியாவை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக, ஜெய்ஷ்-இ-முகம்மது (JeM) அமைப்பு 5,000-க்கும் மேற்பட்ட பெண்களை ஜிகாதி படையினராக உருவாக்கி வந்ததாக, அமைப்புத் தலைவர் மசூத் அசார் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகிய விரிவான தகவல்கள் பின்வருமாறு:

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில், பாகிஸ்தானின் பகவல்பூரில் அமைந்திருந்த ஜெய்ஷ்-இ-முகம்மது தலைமையகம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் மசூத் அசாரின் பெரிய சகோதரி, மைத்துனர் யூசுப் அசார், அவரது மனைவி, அவர்களது ஐந்து குழந்தைகள், அசாரின் பாதுகாப்புப் படையினர் உள்பட 100-க்கும் மேற்பட்ட JeM தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இந்த இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட JeM, இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர புதிதாகத் திட்டமிடத் தொடங்கியுள்ளது. இதுவரை பெண்களை நேரடி பயங்கரவாதப் பணிகளில் ஈடுபடுத்தாத JeM, முதன்முறையாக “ஜமாத்-உல்-முமினாத்” என்ற பெயரில் தனி பெண்கள் பிரிவை உருவாக்கியுள்ளது. பகவல்பூரில் தொடங்கப்பட்ட இந்த பிரிவில் சேரும் பெண்களை தற்கொலைப்படை தாக்குதல்களுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர் தல்ஹா அல்-சைஃப் ஆகியோரின் அனுமதியுடன், அசாரின் சகோதரி சதியா அசார் இந்தப் பெண்கள் பிரிவின் தலைவராக உள்ளார். மேலும் மற்றொரு சகோதரியான சஃபியா அசார், புல்வாமா தாக்குதலை ஒருங்கிணைத்த உமர் ஃபரூக்கின் மனைவி அஃப்ரீரா ஃபரூக் ஆகியோரும் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

‘துஃஃபத் அல்-முமினாத்’ என்ற பெயரில் நடத்தப்படும் ஆன்லைன் ஜிகாதி பாடநெறிகளில் சேரும் ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் 500 பாகிஸ்தான் ரூபாய் வசூலிக்கப்படுகின்றது. தினமும் 40 நிமிடங்கள் நடைபெறும் இந்த வகுப்புகளில் மத வழிப்படுத்தல் மற்றும் ஜிகாத் சார்ந்த கருத்துக்கள் கற்பிக்கப்படுவதோடு, பெண்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத நோக்கத்திற்கு மாற்றுகின்றனர்.

இந்தப் பெண்கள் பிரிவின் இந்திய செயல்பாடுகளை, டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய டாக்டர் ஷாகின் சயீத் ஒருங்கிணைத்ததாக புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நடத்தப்படும் JeM பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி பெரும்பாலும் இவரால் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மசூத் அசார் தனது எக்ஸ் பதிவில், புதிய பெண்கள் தற்கொலைப்படை அணியில் 5,000-க்கும் அதிகமான பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கும் தனி அலுவலகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலிருந்து நேரடி பயிற்சி அளிப்பது வரை, இந்த அலுவலகங்கள் அனைத்தையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

ஜமாத்துடன் சேர்ந்து செயல்படுவது “வாழ்க்கைக்கு நோக்கம் கிடைத்தது” என கூறிய சில பெண் ஜிகாதிகளின் கடிதங்களையும் அசார் தனது பதிவில் இணைத்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள “ஜிகாதி வலையமைப்புகளை உருவாக்குவதற்கு அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழகம் காரணம்” என்ற அரசியல் குற்றச்சாட்டை மறுத்த மசூத் அசார், ஜமாத்-உல்-முமினாத் பிரிவின் தேவையும் செயல்பாடுகளையும் விளக்கும் தனி வீடியோவையும் முன்பு வெளியிட்டிருந்தார்.

இஸ்லாம் சார்ந்த தியாகத்திற்கு “ஜன்னத்” எனப்படும் சொர்க்கம் உறுதியாக வழங்கப்படும் என்று அசார் தனது உரைகளில் கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெண்கள் ஆள்சேர்ப்பு, பயிற்சி நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக பெண்களுக்கான ஆட்சேர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கோடநாடு வழக்கு: “ஏன் இவ்வளவு தாமதம்?” – அதிகாரிகளிடம் நீதிபதி சரமாரி கேள்வி!

கோடநாடு வழக்கு: "ஏன் இவ்வளவு தாமதம்?" - அதிகாரிகளிடம் நீதிபதி சரமாரி...

தமிழக அரசு அதிரடி: ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு அரசாணை

தமிழக அரசு அதிரடி: ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத...

மது போதையில் குடும்பத்தினரை சித்ரவதை: திருவண்ணாமலையில் கணவனை அடித்துக் கொன்ற மனைவி!

மது போதையில் குடும்பத்தினரை சித்ரவதை: திருவண்ணாமலையில் கணவனை அடித்துக் கொன்ற மனைவி! திருவண்ணாமலை...

சுகோய்-30MKI போர் விமான விபத்து: இரண்டு விமானிகள் உயிரிழப்பு – சீனாவின் சிக்னல் ஊடுருவலா எனத் தீவிர விசாரணை!

சுகோய்-30MKI போர் விமான விபத்து: இரண்டு விமானிகள் உயிரிழப்பு - சீனாவின்...