• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

இந்திய முப்படைகளை அதிநவீனப்படுத்தும் மத்திய அரசு – S-400 அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா முனைப்பு!

athibantv by athibantv
நவம்பர் 28, 2025
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

இந்திய முப்படைகளை அதிநவீனப்படுத்தும் மத்திய அரசு – S-400 அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா முனைப்பு!

தேச பாதுகாப்பை உயர்த்துவது என்ற இலக்குடன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முப்படைகளின் நவீனமயத்துக்கு அதிவேகமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் பகுதியாக, ரஷ்யாவின் S-400 வான்பாதுகாப்பு அமைப்பு மற்றும் புதிய ஏவுகணை தொழில்நுட்பங்களை இந்தியா மேலும் வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா உருவாக்கிய S-400 என்பது நிலத்திலிருந்து வான் இலக்குகளை துல்லியமாக சுட்டுத் தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு. 2018 ஆம் ஆண்டு இந்தியா, சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து S-400 அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது.

Related posts

இனி காத்திருக்கத் தேவையில்லை: சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் டெலிவரி – மத்திய அமைச்சகம் அதிரடி தகவல்!

இனி காத்திருக்கத் தேவையில்லை: சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் டெலிவரி – மத்திய அமைச்சகம் அதிரடி தகவல்!

ஏப்ரல் 20, 2026
இலங்கையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்: அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய ஆலோசனை!

இலங்கையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்: அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய ஆலோசனை!

ஏப்ரல் 19, 2026

அந்நேரம், அமெரிக்காவின் CAATSA சட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு தடைகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், பிற்பாடு அது தவிர்க்கப்பட்டது. மாறாக, 2022 ஜூலை 22 அன்று, ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியாவுக்கு “சிறப்பு விலக்கு” வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது.

ஏற்கனவே நான்கு S-400 அமைப்புகள் இந்திய விமானப்படையில் பணியில் இணைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் போரின் காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தால், மீதமுள்ள ஐந்தாவது S-400 அமைப்பு இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த மே மாதம் இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில், S-400 அமைப்பு உலக கவனத்தை ஈர்த்தது. பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்களையும் ஒரு உளவு விமானத்தையும் 300 கி.மீ தூரத்திலேயே நடுவானில் சுட்டு வீழ்த்தி S-400 தனது திறனை நிரூபித்தது.

இந்நிலையில், 10,000 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் ஐந்து S-400 அமைப்புகளை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 120, 200, 250 மற்றும் 380 கி.மீ தூரம் வரை இடைமறிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் அடங்கும். பராமரிப்பு, பழுது நீக்கம் மற்றும் சேவை மையங்களை இந்தியாவிலேயே அமைக்க ரஷ்யாவும் ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும், ரஷ்யாவிடமிருந்து S-500 அமைப்புகளையும், கடற்படை பயன்பாட்டுக்காக சுகோய்-30MKI மற்றும் ஐந்தாம் தலைமுறை சுகோய்-57 போர் விமானங்களையும், மொத்தம் 63,000 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவுடனும் இந்தியா தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், கடந்த அக்டோபர் 31 அன்று புதிய ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. தேஜஸ் போர் விமானங்களுக்கான ஜெனரல் எலக்ட்ரிக் என்ஜின்களுக்காக 8,900 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் முடிவுற்றுள்ளது.

இந்திய கடற்படைக்கு வாங்கப்பட உள்ள 24 MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களுக்கு தேவையான “தொடர் ஆதரவு தொகுப்பு”க்காக கூடுதலாக 7,000 கோடி ரூபாயை மத்திய ராணுவ தளவாட கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

2035க்குள் இந்தியா தானே உருவாக்கும் உள்நாட்டு ஸ்டெல்த் மேம்பட்ட நடுத்தர போர் விமானத் திட்டமும் நடைபெற்று வருவதால், அதற்கு முன்னதாகவே முப்படைகளை அதிநவீனப்படுத்த மத்திய அரசு துரிதப்படுத்தி செயல்பட்டு வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

புனே தொழிலாளியின் பழைய புகைப்படம் வைரல் – புதிய சர்ச்சையை கிளப்பும் எக்ஸ் பதிவுகள்!

Next Post

செஞ்சி போக்குவரத்து நிலையத்தை சூழ்ந்த பள்ளி மாணவர்கள் – பேருந்து வசதி கோரி அதிருப்தி வெளிப்பாடு!

Next Post

செஞ்சி போக்குவரத்து நிலையத்தை சூழ்ந்த பள்ளி மாணவர்கள் – பேருந்து வசதி கோரி அதிருப்தி வெளிப்பாடு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

ஏப்ரல் 20, 2026
சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 20, 2026
திமுக அரசின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க முடியுமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

திமுக அரசின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க முடியுமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

ஏப்ரல் 20, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!
  • சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!
  • திமுக அரசின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க முடியுமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

ஏப்ரல் 20, 2026
சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 20, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN