நடிகை ராதிகா தயாரிப்பில் தான் தனது முதல் திரைப்படம் வெளிவந்தது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஜே.கே. சந்துரு, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் சென்ராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசும்போது, ரிவால்வர் ரீட்டா கதையை கேட்டவுடன் படத்தில் நடிக்க உடனே சம்மதித்ததாக கீர்த்தி சுரேஷ் கூறினார். ரீட்டா கதாபாத்திரத்திற்கு தன்னை தேர்வு செய்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்து, படத்தில் நடிகர் சென்ராயன் நடித்த சில காட்சிகள் நீக்கப்பட்டதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரிவால்வர் ரீட்டா ஒரு குடும்பம் முழுவதும் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படமாக உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.