டெல்லி மாசுப் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் அலுவலகம் அவசரக் கூட்டம்

Date:

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் அலுவலகம் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. தலைநகரில் காற்றுத் தரம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் முன்னிலையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் இன்னும் சுமார் 37% BS3 தர வாகனங்கள் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, அந்த விடயமும் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

மாசு உமிழும் பழைய வாகனங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாநில அரசு அதிகாரிகளுக்கு இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மின்சார வாகனங்களை அதிகம் ஊக்குவித்து காற்று மாசை கட்டுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் அரசும் தனியார் நிறுவனங்களும் 50% பணியாளர்களை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் மாற்றியுள்ள சூழலில், காற்று மாசு பிரச்சனையை சமாளிக்க பிரதமர் அலுவலகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இலக்கை எட்டாத PSLV-C62: தொழில்நுட்ப குறைபாடா காரணம்?

இலக்கை எட்டாத PSLV-C62: தொழில்நுட்ப குறைபாடா காரணம்? இந்த ஆண்டில் முதன்முறையாக இஸ்ரோ...

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: காதலியை சந்திக்க வந்த குற்றப்பின்னணி கொண்ட நபர் படுகொலை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: காதலியை சந்திக்க வந்த குற்றப்பின்னணி கொண்ட...