படகு சவாரியின் போது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் — அமெரிக்க பெண்ணின் சர்ச்சை!

Date:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற படகு சுற்றுலா பயணத்தின் போது, செல்போன் ஆடியோ சத்தத்தை குறைக்கும்படி கூறியதற்கு ஆத்திரமடைந்த ஒரு பெண், இந்திய வம்சாவளியினரைச் சேர்ந்தவர்கள் உட்பட 8 பேர்மீது பெப்பர் ஸ்பிரே தெளித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிவந்துள்ளது.

சான் அன்டோனியோ நகரில் அமைந்துள்ள ‘ரிவர் வாக்’ பகுதியில் பலரும் சேர்ந்து படகு சவாரியில் ஈடுபட்டிருந்தனர். அதில் இந்திய குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், படகில் இருந்த ஒருபெண்ணிடம் அவரது மொபைல் போனின் சத்தத்தை குறைக்குமாறு படகோட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண், படகோட்டியிடம் மோசமாக வார்த்தை பேசி, அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர், அவரை படகிலிருந்து இறக்குமாறு கூறப்பட்டதும், மேலும் ஆவேசமடைந்த அவர் தனது பையில் இருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து, குழந்தை ஒருவர் உட்பட அங்கு இருந்த 8 பேரின் மேல் தெளித்துவிட்டார்.

தாக்குதலால் அனைவரும் கண்களில் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய பெண் தற்போது ஓட்டம் பிடித்திருப்பதாகவும், அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐரோப்பாவை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம் – மொசாட் அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலை தாக்கியதைப் போலவே, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்தத்...

ஒரே நாளில் இருவேளை தங்கம் விலை சரிவு — சவரன் 93,920 ரூபாயாக குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள்...

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் — அடுத்த கல்வியாண்டில் அமல்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...

இனி திமுக ஆட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ஆட்சிப் பரிமாற்றத்திற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டதாகவும், திமுக அரசை இனி எந்த...