சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு!

Date:

சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் காணப்படும் நிலையில், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் தங்கத் தகடுகளை சீரமைப்பு செய்ய சென்னைக்கு கொண்டு வந்தபோது அவை திருடப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

வழக்கில் கைது செய்யப்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி, உண்மையான தங்கத் தகடுகளை உருக்கி சென்னையில் விற்றதுடன், அதன் மாற்றாக தங்கமுலாம் பூசப்பட்ட போலி தகடுகளை வைத்திருந்தது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய புலனாய்வு குழு, உன்னிகிருஷ்ணன் விற்ற தங்கத் தகடுகள் நடிகர் ஜெயராமிடம் சென்றிருக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் வசிக்கும் நடிகர் ஜெயராமை நேரடியாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாலிவுட்டின் ‘ஹீமேன்’ தர்மேந்திரா – காலத்தை தாண்டி வாழ்ந்த சூப்பர் ஹீரோ!

பாலிவுட்டின் அடையாளமாக திகழ்ந்த ‘ஹீமேன்’ தர்மேந்திராவின் மறைவு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும்,...

டிரம்ப் வைத்துள்ள 28 அம்ச அமைதி திட்டம்: ஜெலன்ஸ்கி எதைத் தேர்வுசெய்வார்?

உக்ரைன்–ரஷ்யா போருக்கான தனது சமாதான முன்மொழிவை உக்ரைன் ஏற்கவில்லை என்றால், ஜெலன்ஸ்கியின்...

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாகும் சாத்தியம் — வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று, அடுத்த 48...

பிகேஎல் 2025 ஏலத்தின் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ்: உயர்ந்த பிட் – ஆனில் மோகன் சாதனை!

பிகேஎல் 2025 ஏலத்தின் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ்: உயர்ந்த பிட் –...