சென்னையில் பெண்கள் பாதுகாப்பு குறைய காணப்படுவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்து கவலை வெளியிட்டுள்ளார்.
‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அப்போது ஊடகங்களிடம் பேசும்போது பல முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.
அவர் கூறியதாவது:
- AI தொழில்நுட்பம் பெரிய அபாயமாக மாறி வருகிறது,
சமந்தாவுடன் எடுத்த புகைப்படத்தை மாற்றி உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருப்பதைப் பார்த்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது என தெரிவித்தார்.
- வெளிநாடுகளில் பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புடன் ஒப்பிடும்போது,
சென்னையில் பெண்களின் பாதுகாப்பு நிலை பலவீனமாக உள்ளது,
இது விரைவில் மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை பற்றி கேட்டபோது,
தனது X கணக்கில் வரும் எதிர்மறை கருத்துகளை கவனிக்க வேண்டியதில்லை,
அவற்றை முற்றிலும் புறக்கணிப்பேன் எனத் தெரிவித்தார்.
மேலும்,
- நாய்களை மிகவும் நேசிப்பதாகவும்,
தெரு நாய்களைப் பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போதே,
அவற்றுக்கு தொடர்பான பிரச்சினைகள் எவ்வளவு பரவலாக உள்ளன என்பது புரிகிறது என்றும் குறிப்பிட்டார்.