சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்குவது சுந்தர்.சி என நவம்பர் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 2027 பொங்கல் பண்டிகை காலத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளியீட்டு பொறுப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வகிப்பதாகவும் ராஜ் கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.