உடல்நிலை சரியில்லாதபோதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி – சசி தரூர்

Date:

கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி “ஆக்கபூர்வமான பொறுமையின்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் காலனித்துவத்திற்குப் பிறகான மனநிலையை மாற்றும் தேவையை வலியுறுத்திய பிரதமர், “இந்தியா வளர்ந்து வரும் சந்தை மட்டுமல்ல; உலகிற்கு வளர்ந்து வரும் மாதிரி” எனக் குறிப்பிட்டார்.

அதேபோல்,

  • நாட்டின் பொருளாதார மீட்சி,
  • மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உணர்ச்சிகரமான அணுகுமுறை,
  • மெக்காலே உருவாக்கிய 200 ஆண்டுகால அடிமை மனநிலையை முறியடித்தல்,
  • இந்திய பாரம்பரியம், மொழிகள், அறிவு அமைப்புகளின் பெருமையை மீட்டெடுக்க அடுத்த 10 ஆண்டுகளை அர்ப்பணிக்கும் அவசியம்

என பல அம்சங்களை பிரதமர் தனது உரையில் வலியுறுத்தியதாக தரூர் குறிப்பிட்டார்.

தரூர் தனது எக்ஸ் பதிவில்,

“இந்திய தேசியவாதத்துக்காக ராம்நாத் கோயங்கா ஆங்கிலத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் பிரதமரின் உரை பொருளாதாரமும் கலாச்சாரமும் கலந்த ஒரு விரிவான நோக்கைக் கொண்டது. முன்னேற்றத்திற்காக தேசம் அமைதியற்ற மனநிலையுடன் செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். கடுமையான சளி–இருமலால் அவதிப்பட்டபோதிலும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சபரிமலையில் கட்டுப்பாடற்ற கூட்ட நெரிசல்: குழந்தைகள், வயதானோர் அவதிப்பாடு – மூதாட்டி மாரடைப்பால் மரணம்

சபரிமலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நெரிசல் காரணமாக குழந்தைகளும், முதியோர்களும் கடும்...

வங்கக் கடலில் தாழ்ந்த காற்றழுத்தம்: நவம்பர் 23, 24–ல் வட தமிழகமும் டெல்டாவும் கனமழை பெற வாய்ப்பு

சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்...

கோயில் செயல் அலுவலர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசிடம் விளக்கம் கோரிய உயர்நீதிமன்றம்

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கான செயல்...