கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா 4-வது சுற்றின் டைபிரேக்கரில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். ரஷ்ய வீரர் டேனியல் துபோவுக்கு எதிராக 1.5–2.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தோல்வி பெற்றார். 2023-ல் இறுதி வரை சென்ற பிரக்ஞானந்தாவின் இம்முறை விரைவான வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதேவேளையில், மற்ற இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் பி. ஹரிகிருஷ்ணா டைபிரேக்கரில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
- அர்ஜுன் எரிகைசி – 3–1 (ஹங்கேரி: பீட்டர் லெகோ)
- ஹரிகிருஷ்ணா – 2.5–1.5 (சுவீடன்: நில்ஸ் கிராண்டேலியஸ்)
அதே தொடரில் இந்திய வீரர்களான வி. பிரணவ் (உஸ்பெகிஸ்தான்: நோடிர்பெக் யாகுபோவ்) மற்றும் வி. கார்த்திக் (வியட்நாம்: லெ குவாங் லீம்) டைபிரேக்கரில் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டனர்.