தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி — 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை!

Date:

தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி — 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை!

அயோத்தி நகரம் நேற்று இரவு தீபாவளி பண்டிகையையொட்டி பிரகாசமாக ஜொலித்தது. சரயு நதிக்கரையில் 29 லட்சம் அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. மேலும், 2,128 அர்ச்சகர்கள் ஒரே நேரத்தில் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக 22 அலங்கார ஊர்திகள் கொண்ட அணிவகுப்பு ராமர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஊர்திகளில் ராமாயணக் காட்சிகள், கும்பமேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்ட தலைப்புகள் வெளிப்படுத்தப்பட்டன.

அயோத்தி சரயு நதிக்கரையில் அமைந்துள்ள 56 படித்துறைகளில் மாலை 29 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதற்காக 73,000 லிட்டர் எண்ணெய் மற்றும் 55 லட்சம் பருத்தித் திரிகள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 33,000 தன்னார்வலர்கள் இணைந்து இந்த பிரம்மாண்ட நிகழ்வை நிறைவேற்றினர்.

அதே நேரத்தில், சரயு நதியின் கரையில் 2,128 அர்ச்சகர்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி வழிபாடு நடத்தியது மேலும் ஒரு உலக சாதனையாக அமைந்தது. இதனுடன், 1,100 ட்ரோன்கள் மூலம் வானில் ராமர், அனுமன், ராமர் பாலம், அயோத்தி கோயில் போன்ற வடிவங்களில் ஒளி காட்சிகள் நிகழ்த்தப்பட்டன.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன், ராமர்-சீதை தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

9-வது ஆண்டு தீப உற்சவம் கோலாகலமாக:

ராமகதா பூங்காவில் நடைபெற்ற விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றியபோது, “2017ஆம் ஆண்டில் முதன்முதலாக தீப உற்சவத்தை தொடங்கினோம். இப்போது இது 9-வது ஆண்டாக கோலாகலமாக நடைபெறுகிறது.

கடந்த காலத்தில் சிலர் ராமரும், ராமர் பாலமும் கற்பனை என்று கூறினர்; ஆனால் மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. 1990ஆம் ஆண்டில் கரசேவகர்கள் அயோத்தி நோக்கிப் பாதயாத்திரை சென்றபோது, அப்போதைய சமாஜ்வாதி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவர்கள் துப்பாக்கி சுடினார்கள், ஆனால் இன்று நாம் ராமருக்காக தீபங்களை ஏற்றுகிறோம். உத்தரப் பிரதேசத்தில் இன்று ‘ராம ராஜ்ஜியம்’ நிலவுகிறது,” என்று அவர் உரையாற்றினார்.

இதனால், தீபாவளி பண்டிகையன்று அயோத்தி நகரம் ஒளி, பக்தி, உற்சாகம் நிறைந்த வண்ணம் பிரகாசித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி!

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி! பிரபல திரைப்பட...

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதலமைச்சர் நடத்திய நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதலமைச்சர் நடத்திய நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு மத்திய...

பொறாமை காரணமாக 4 குழந்தைகளை கொன்ற மனச்சோர்வு பெண் அரியானாவில் கைது!

பொறாமை காரணமாக 4 குழந்தைகளை கொன்ற மனச்சோர்வு பெண் அரியானாவில் கைது! அரியானா...

சமூக ஊடகத் தடையை மீறினால் 297 கோடி அபராதம்!

சமூக ஊடகத் தடையை மீறினால் 297 கோடி அபராதம்! ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு...