இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான இரங்கல்!
மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழமான இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு செய்தி எனக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவின் போக்கையே முற்றிலும் மாற்றியமைத்த அசாத்தியமான காவியப் படைப்புகளைத் திரையுலகிற்குத் தந்தவர் அவர். இந்தியத் திரைத்துறையின் மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான ஆளுமைகளில் ஒருவராகப் பாரதிராஜா திகழ்ந்தார்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், பாரதிராஜாவின் திரை ஆளுமை குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “தன்னுடைய திரைப்படங்களின் மூலம், குறிப்பாக இந்தியக் கிராமப்புறங்களின் யதார்த்தமான வாழ்க்கையையும், அதன் அழகையும் திரையில் மிக அற்புதமாகச் சித்தரித்த பெருமை அவருக்கு உண்டு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்தத் திரை உலகினருக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது இரங்கல் செய்தியில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.





