மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!
புதுடெல்லி: இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதல் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பிளாட்டினம் நகைகளுக்கான இறக்குமதி சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மோசமான செயல்திறன் கொண்ட நாணயங்களில் ஒன்றாகத் தொடரும் இந்திய ரூபாய்க்கு ஆதரவளிப்பதே இந்த வரி உயர்வின் முக்கிய நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு முறையானது இன்று முதலே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




