ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: நாகாலாந்து திடீர் பதிலடி – நிஸ்சல், லெம்தூர் செஞ்சுரி

Date:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: நாகாலாந்து திடீர் பதிலடி – நிஸ்சல், லெம்தூர் செஞ்சுரி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு – நாகாலாந்து அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.

முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 115 ஓவர்களில் 3 விக்கெட்களுக்கு 512 ரன்கள் எடுத்தபின் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய நாகாலாந்து அணி, 2ஆம் நாள் ஆட்ட முடிவில் 58 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. தேகா நிஸ்சல் 80 ரன்களும், யுகந்தர் சிங் 58 ரன்களும் சேர்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

மூன்றாவது நாள் ஆட்டத்தில், யுகந்தர் சிங் 67 ரன்களில் அவுடானார். பின்னர் இம்லிவதி லெம்தூர் களமிறங்கி சிறப்பாக ஆடியார்.

நாகாலாந்து அணி 127 ஓவர்களில் 5 விக்கெட்களுக்கு 365 ரன்கள் எடுத்தபோது, வெளிச்சம் குறைவதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தேகா நிஸ்சல் 161 ரன்களுடனும், இம்லிவதி லெம்தூர் 115 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் தமிழ்நாட்டை விட 147 ரன்கள் பின்தங்கிய நிலையில், 5 விக்கெட்கள் கைவசம் வைத்துள்ள நாகாலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம்

ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம் முன்னாள்...

விஜய் திவாஸ் : சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி

விஜய் திவாஸ் : சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி விஜய்...

பாஜகவின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ – யார் இந்த நிதின் நபின்?

பாஜகவின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ – யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் தேசிய...

நொடிப்பொழுதில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்!

நொடிப்பொழுதில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்! இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்...