தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
புதுடெல்லி:
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள்:
இதுவரை தாராளமாக இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களின் பட்டியலில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள், இனி “கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை” (Restricted) என்ற பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இனிமேல் மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்திடம் முறையான உரிமம் (License) பெற்றிருந்தால் மட்டுமே இந்த நகைகளை இறக்குமதி செய்ய முடியும்.
உடனடி அமல்:
இந்தக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி ஒப்பந்தங்கள் மற்றும் திரும்பப் பெற முடியாத வங்கி உத்தரவாதக் கடிதங்களுக்கும் (Irrevocable Letters of Credit) இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டிருந்தாலோ அல்லது சரக்குகள் பரிமாற்றத்தின் எந்த நிலையில் இருந்தாலோ, இந்தப் புதிய கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையைச் சீரமைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.





