ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி ஒரு தேசியக் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்தபோதிலும், ஒரு மாநிலத் தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் புரிதல் கூட அவரிடம் இல்லை என்று குறிப்பிட்டார்.
எந்த ஒரு விவகாரத்தையும் ராகுல் காந்தி தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்றும், தனது கடந்த கால அனுபவங்களில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்வதில்லை என்றும் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய பண்புகள் ஒரு சிறந்த அரசியல் தலைவருக்குப் பொருத்தமானவை அல்ல என்றும், காங்கிரஸின் மிக முக்கியத் தலைவரிடம் இத்தனை குறைபாடுகள் இருப்பது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் அரசியல் சூழலில் பினராயி விஜயனின் இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.









