ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கப் படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் விரும்புவதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தகுதியான தலைவர்கள் எவரும் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய ட்ரம்ப், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஈரானைச் சேர்ந்த 58 கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி மூழ்கடித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது தற்காலிகமான ஒரு சிறிய விலையேற்றம் மட்டுமே என்றும், போர் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலை பெருமளவில் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.







