விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன் பாகவத் வலியுறுத்தல்
நாக்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு
மனிதர்கள், விலங்குகள் மற்றும் இயற்கை ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால், அவற்றுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டியது அவசியம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நகரில் செயல்படும் விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனிதர்கள் அனைத்தும் ஒரே சூழலியல் அமைப்பின் பகுதிகளாக உள்ளதாகவும், ஒன்றின்றி ஒன்று இயங்க முடியாத நிலை இருப்பதை உலகம் தற்போது உணரத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேசமயம், இணைந்து வாழும் சூழலில் நோய்கள் போன்ற சவால்களும் உருவாகலாம் என்பதால், சமநிலையுடன் வாழ்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கால்நடை மருத்துவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும், அவர்கள் விலங்குகள் தொடர்பான நிபுணர்களாக மட்டுமல்லாது சமூக வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்தியா விவசாயத்தை மையமாகக் கொண்ட நாடு என்பதால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிப்பதில் கால்நடைத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் வலியுறுத்தினார்.