ராகுல் காந்தியை பதவி நீக்க கோரி மக்களவையில் தனிநபர் தீர்மானம் தாக்கல்
உரையின்போது முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து பாஜக எம்பி நடவடிக்கை
கட்சியின் எம்பியான மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க கோரி, மக்களவையில் தனிநபர் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் தொடர்புடைய வர்த்தக ஒப்பந்த விவகாரம் குறித்து மக்களவையில் உரையாற்றிய ராகுல் காந்தி, “எப்ஸ்டீன் கோப்புகள்” தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோரின் பெயர்களை இணைத்து குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முன்னறிவிப்பின்றி மற்றும் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் குற்றம் சாட்டி, (பாஜக) எம்பி , ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தனிநபர் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
மேலும், அவர் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.