மும்பை மாநகராட்சியின் மேயராக ரிது தவ்டே தேர்வு – 44 ஆண்டுகளுக்கு பின் பாஜக ஆட்சி
227 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 89 இடங்கள் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
நாட்டின் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் யில் 44 ஆண்டுகளுக்கு பின் (பாஜக) ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, கட்சியின் ரிது தவ்டே போட்டியின்றி மேயராக பொறுப்பேற்றார்.
இந்த மாநகராட்சியை கடந்த 25 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. குறிப்பாக தலைமையிலான சிவசேனா நிர்வாகம் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது. கடந்த மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 227 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், பாஜக 89 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மாநகராட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாஜக சார்பில் ரிது தவ்டே மேயராகவும், கூட்டணி கட்சியான சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் காதி துணை மேயராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
44 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை மாநகராட்சியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.