பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி
மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல முல்தானி பேக்கரி நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் மோதிலால் சதரங்கானி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முல்தானி பேக்கரி, மகாராஷ்டிரா முழுவதும் பல கிளைகளை கொண்ட பிரபல நிறுவனமாக விளங்கி வருகிறது. அதன் உரிமையாளரான சுனில் மோதிலால் சதரங்கானி, மாநிலத்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.
இந்நிலையில், புனேவில் உள்ள அவரது குடியிருப்பில் ஏற்பட்ட சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரமான நிகழ்வுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.