வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி வேண்டுகோள்
வெளிநாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள தனது சகோதரரை மீட்டுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை செலினா ஜெட்லி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் சிறப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய விக்ராந்த் ஜெட்லி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களை முன்வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்தோ, கைது செய்யப்பட்டதற்கான தெளிவான காரணம் குறித்தோ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, கடந்த 18 மாதங்களாக ஐக்கிய அரபு அமீரக காவலில் இருக்கும் விக்ராந்த் ஜெட்லியை விடுவிக்க மத்திய அரசு தலையிட்டு உதவ வேண்டும் என, அவரது சகோதரி நடிகை செலினா ஜெட்லி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.