மும்பை–புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் ஸ்தம்பித்த வாகன இயக்கம்
மும்பை–புனே விரைவுச்சாலையில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் கவிழ்ந்த சம்பவத்தால், இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 33 மணி நேரம் வாகனப் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
புனேவில் இருந்து மும்பையை நோக்கி அதிக வேகத்தில் சென்றுகொண்டிருந்த எரிவாயு டேங்கர், அதோஷி சுரங்கப்பாதை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
அந்த டேங்கரில் இருந்த, தீப்பற்றும் தன்மை கொண்ட புரோப்பிலீன் எரிவாயு வெளியே கசியத் தொடங்கியதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களால் காவல்துறையினர் சாலையின் இருபுறங்களிலும் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தினர்.
இதன் விளைவாக, விரைவுச்சாலையில் வாகன இயக்கம் 33 மணி நேரத்திற்கு முழுமையாக முடங்கியது. பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, இரவு சுமார் 1.30 மணியளவில் போக்குவரத்து மெதுவாக மீண்டும் தொடங்கியது.