• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தேசிய பாதுகாப்புக்கு முதன்மை – இராணுவத்திற்கு பெரும் நிதி: அச்சத்தில் பாகிஸ்தான்

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Bharat
A A
0
👁️ 3.3K 🔥

தேசிய பாதுகாப்புக்கு முதன்மை – இராணுவத்திற்கு பெரும் நிதி: அச்சத்தில் பாகிஸ்தான்

தேசிய பாதுகாப்பை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக சுமார் 7,84,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அபார நிதி ஒதுக்கீடு, பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதன்முறையாக பதவியேற்றதிலிருந்து, நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான செலவினங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. அந்த ஆண்டில் 2.29 லட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு பட்ஜெட், கடந்த நிதியாண்டில் 6.81 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட புதிய பட்ஜெட்டில், இந்தியாவின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு 7.85 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது வரவிருக்கும் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதமாகும். மேலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஒதுக்கீடு சுமார் 24 சதவீதம் அதிகமாக உள்ளது.

இந்த நிதி, இந்திய இராணுவத்தின் திறன்களை மேம்படுத்தவும், தளவாட வசதிகளை நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக, கடந்த ஆண்டைவிட 45.49 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அளவிலான பாதுகாப்பு செலவினம் சாதாரணமானது அல்ல என்றும், இந்தியா தேச பாதுகாப்புக்கு எந்த அளவுக்கு முன்னுரிமை வழங்குகிறது என்பதற்கான தெளிவான சான்று இதுவாகும் என்றும், பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை ஆய்வாளரான கமர் சீமா (Qamar Cheema) தனது காணொளி பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் வரி தொடர்பான அழுத்தங்கள் இருந்தபோதிலும், ரஷ்யாவின் சுகோய்-57 போன்ற நவீன போர் விமானங்களை இந்தியா வாங்கும் திட்டம் உறுதியாகும் என்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RelatedPosts

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026

கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்தியாவின் கடுமையான தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் தலையிட்டதையடுத்து, இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் அரசு தனது மொத்த பட்ஜெட்டில் 14.5 சதவீதத்தை ஒதுக்கி, பாதுகாப்பு செலவினத்தை 20.2 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம், 428 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக இருந்த பாதுகாப்பு நிதி, 2,550 பில்லியன் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.97 சதவீதமாகும்.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டை பாகிஸ்தானுடன் நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும், இந்தியாவின் பாதுகாப்பு செலவினம் பாகிஸ்தானைவிட சுமார் ஒன்பது மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் இராணுவத்திற்கு வழங்கப்படும் இந்தப் பெரும் நிதி ஒதுக்கீடு, சீனாவை விட பாகிஸ்தானுக்கு அதிகமான மூலோபாயச் சவால்களை உருவாக்கும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Bharat
Previous Post

அரசு வேலை வழங்கலில் முறைகேடு குற்றச்சாட்டு – மருத்துவ ஆய்வு நிபுணர்கள் சாலை மறியல்

Next Post

எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்ப் குறித்து கடும் குற்றச்சாட்டு

RelatedPosts

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026
மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
Next Post
Home

எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்ப் குறித்து கடும் குற்றச்சாட்டு

Home

சேலத்தில் ஜீவசமாதி முயற்சிக்கு அனுமதி மறுப்பு – பிரம்மச்சாரியர் உயிரிழப்பு, பரபரப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!
  • திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.