மத்திய பட்ஜெட் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும்

Date:

மத்திய பட்ஜெட் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும்

மத்திய பட்ஜெட் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பயனாக அமையும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரதப் பிரதமர் மோடியின் தூரநோக்கு யோசனைகள் மற்றும் நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கடுமையான உழைப்பின் இணைப்பாக உருவாக்கப்பட்டுள்ள 2026–27 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை, ஏழைகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள், தொழில்துறை நிர்வாகிகள் போன்ற அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்த பட்ஜெட்டின் செலவினம் ₹53.5 லட்சம் கோடி ஆக உயர்ந்திருப்பது, நாட்டின் முதலீட்டு திறனை வெளிப்படுத்துகிறது. 2026–27 ஆண்டிற்கான மூலதனச் செலவு ₹12.2 லட்சம் கோடி என, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் முழுமையான வளர்ச்சி மேம்படும்; புதிய சாலைகள், ரயில்வே பாதைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கமளித்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி முதலீட்டில் ‘பயோஃபார்மா சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இது இந்தியாவை உலகளாவிய பயோஃபார்மா மையமாக மாற்றி, புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறு நிறுவனங்களுக்கு ₹10,000 கோடி வளர்ச்சி நிதி வழங்கப்படும் அறிவிப்பு, இவை தேசிய மற்றும் உலகளாவிய அளவில் முன்னணி நிறுவனங்களாக வளர உதவும் என்றும், இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அரிய வகை கனிம வழித்தடங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான முக்கிய கனிமங்கள் சார்ந்த சுரங்கப் பணிகள், பதப்படுத்தல் மற்றும் உற்பத்திக்கு ஆதரவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. மின்னணு உதிரிப்பாக உற்பத்திக்கான நிதி ₹40,000 கோடி ஆக உயர்த்தப்படுவது, “Make In India” திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும் 20 புதிய தேசிய நீர்வழிகள் மற்றும் தனிப்பட்ட சரக்கு வழித்தடங்கள், நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமாக்கும். சென்னை–பெங்களூரு மற்றும் சென்னை–ஹைதராபாத் உட்பட ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள், முக்கிய பொருளாதார மையங்களுக்கு இடையே பசுமை போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்ஜெட்டில், தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உட்பட 15 தொல்லியல் இடங்களை கலாச்சார மையங்களாக மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் செழிப்பான நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும்.

இந்த ஆண்டின் புதிய தென்னை மேம்பாட்டுத் திட்டம் பழைய மரங்களுக்கு புத்துயிர் ஊட்டும், உற்பத்தியை அதிகரிக்கும், இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சுமார் 1 கோடி தென்னை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அமையும்.

முந்திரி மற்றும் கோகோவிற்கான பிரத்யேகத் திட்டங்கள், ஏற்றுமதியை மேம்படுத்தி, 2030-க்கு “இந்திய முந்திரி” மற்றும் “இந்திய கோகோ” என்ற உலகளாவிய பிராண்டுகளை உருவாக்கும்; இதன் மூலம் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயனாக அமையும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் விவசாய ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கைகள், விவசாயிகளை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நமது பலமிக்க இளைஞர் சக்தியை வளர்க்கும் வகையில், 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் Content Creation பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, இது மாணவர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

‘SHE-மார்ட்ஸ்’ திட்டம், பெண்களை சுய உதவி குழுக்களில் இருந்து தொழில்முனைவோராக மாற்றி, கிராமப்புற பெண்களின் சில்லறை விற்பனை மற்றும் வணிக முயற்சிகளை ஊக்குவிக்கும். STEM கல்விக்கான மாணவியர் விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவது, பெண் மாணவிகள் பாதுகாப்பாக உயர் தொழில்நுட்பக் கல்வி கற்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி காங்கிரஸ் மற்றும் மற்ற இண்டி...

வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!

வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக! கடலூர்...

மத்திய பட்ஜெட் 2026: ஆதிச்சநல்லூரில் கலாச்சாரப் பாரம்பரிய மையம் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2026: ஆதிச்சநல்லூரில் கலாச்சாரப் பாரம்பரிய மையம் அமைக்கப்படும் –...

எப்ஸ்டீன் கோப்பு: பிரதமர் மோடிக்கு தொடர்பான குறிப்பு “வதந்தி மட்டுமே” – மத்திய அரசு விளக்கம்

எப்ஸ்டீன் கோப்பு: பிரதமர் மோடிக்கு தொடர்பான குறிப்பு “வதந்தி மட்டுமே” –...