இந்தியா – அமெரிக்கா இடையேயான இணைப்பாக செயல்படுவதில் Google பெருமை கொள்கிறது – சுந்தர் பிச்சை
டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சி மாநாட்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
“நாம் மிகுந்த முன்னேற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகும் காலகட்டத்தின் உச்சியில் உள்ளோம். எனினும், சிறந்த விளைவுகளுக்கான உறுதி இன்னும் கிடைக்கவில்லை.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் அனைவருக்கும், எல்லா இடங்களிலும் கிடைக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதில் இந்தியா – அமெரிக்கா கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரண்டு நாடுகளுக்கிடையே இணைப்புப் பாலமாக செயல்படுவதில் கூகுள் பெருமை அடைகிறது.
கூகுள் நிறுவனத்தின் முக்கிய முயற்சிகளில், இரு நாடுகளிலும் உள்ள அணிகள் தடையின்றி இணைந்து பணியாற்றுகின்றன. Google Pay உள்ளிட்ட இந்தியாவில் உருவாகும் புதுமைகள், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்க உதவுகின்றன.
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் வளர்ச்சி மிகுந்த சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்த வளர்ச்சி பயணத்தில் தயாரிப்பு விரிவாக்கம் (Product Scaling) மற்றும் உள்கட்டமைப்பு (Infrastructure) போன்ற துறைகளில் இந்தியாவிற்கு எங்கள் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.