பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு மேக்கப் தண்டனை – வைரலாகும் போலீஸ் நடவடிக்கை

Date:

பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு மேக்கப் தண்டனை – வைரலாகும் போலீஸ் நடவடிக்கை

மத்தியப் பிரதேசத்தில், இளம் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை ஆபாசமாக பேசி கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை, சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நரசிங்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்கள், அங்கு வந்த இளம் பெண்களையும் பள்ளி மாணவிகளையும் அவதூறாக பேசி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீசாரின் கவனத்திற்கு சென்றது.

அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த இரு இளைஞர்களையும் கைது செய்தனர். பின்னர், சட்டப்படி நடவடிக்கையுடன் சேர்த்து, அவர்களுக்கு விதவிதமாக ஜடை பின்னி, மேக்கப் போட்டு, அதே கோலத்தில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர். இந்த நிகழ்வும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ தற்போது இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.

பெண்களை அவமதிக்கும் செயல்களுக்கு கடும் பாடம் புகட்டியதாக ஒரு தரப்பினர் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் பொதுவெளியில் அவமானப்படுத்துவது சரியான நடைமுறை அல்ல என்றும், இது கண்டனத்திற்குரியது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம்,

தண்டனை – விழிப்புணர்வு – மனித உரிமை

என்ற மூன்றுக்குமிடையிலான எல்லை குறித்து சமூகத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தவெக – காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் துரோகம் செய்த ராகுல் காந்தி

தவெக - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் துரோகம் செய்த ராகுல் காந்தி...

கேரளாவில் பயங்கரம்: பிரபல ரவுடி கும்பல் தலைவன் ‘அலுவா அதுல்’ சினிமா பாணியில் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

கேரளாவில் பயங்கரம்: பிரபல ரவுடி கும்பல் தலைவன் 'அலுவா அதுல்' சினிமா...