• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மே 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

காசா அமைதி வாரியத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் – நாட்டுக்குள் வெடித்தெழும் எதிர்ப்பு

athibantv by athibantv
ஜனவரி 24, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 610 📋

காசா அமைதி வாரியத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் – நாட்டுக்குள் வெடித்தெழும் எதிர்ப்பு

காசா பகுதியை மறுசீரமைப்பதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள ‘Board of Peace’ (அமைதி வாரியம்) குழுவில் பாகிஸ்தான் இணைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டில் கடும் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் முயற்சி என்றும், உலகளாவிய அளவில் ஐநா அமைப்பை புறக்கணிக்கும் செயல் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Related posts

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: ஒரு பேரல் 120 டாலரை எட்டியதால் அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: ஒரு பேரல் 120 டாலரை எட்டியதால் அதிர்ச்சி!

ஏப்ரல் 30, 2026
ஈரான் தாக்குதலுக்குப் பதிலடி: ஐக்கிய அரபு அமீரகத்தைக் காக்கும் இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ – ஒரு சிறப்புத் தொகுப்பு!

ஈரான் தாக்குதலுக்குப் பதிலடி: ஐக்கிய அரபு அமீரகத்தைக் காக்கும் இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ – ஒரு சிறப்புத் தொகுப்பு!

ஏப்ரல் 28, 2026

இஸ்ரேல்–ஹமாஸ் போருக்கு முடிவுகாணும் நோக்கில், முன்பே ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, அவரின் தலைமையில் இந்த அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது.

இந்த வாரியத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல், ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், மேலும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

போரால் கடுமையாக சேதமடைந்த காசாவை மீள்கட்டமைக்கவும், அங்கு நீடித்த அமைதியை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த அமைதி வாரியத்தில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் ஏற்கெனவே துருக்கி, கத்தார், ஹங்கேரி, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானும் இந்த குழுவில் சேர முடிவு செய்துள்ளது.

ஆனால், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தலைமையிலான அரசு எடுத்த இந்த தீர்மானம், பாகிஸ்தானுக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ், இந்த முடிவு கொள்கை ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் தவறானது என்றும், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்றும் விமர்சித்துள்ளார். இது புதிய காலனித்துவ அரசியலின் வெளிப்படை வடிவம் என்றும், காசாவின் மறுசீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் அரசியல் நிர்வாகத்தை அந்நிய சக்திகளிடம் ஒப்படைக்கும் முயற்சி என்றும் அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறுகிய கால அரசியல் கணக்கீடுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள், நாட்டுக்கு நீண்டகால பாதிப்புகளை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேபோல், நாடாளுமன்றத்தில் எந்தவிதமான பொது விவாதமும் நடத்தாமல் அமைதி வாரியத்தில் இணைந்தது, நாட்டை புறக்கணிக்கும் செயலாகும் என்று

Tehreek-i-Tahafuz-i-Ayeen-i-Pakistan அமைப்பின் தலைவர் முஸ்தபா நவாஸ் கோகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நிரந்தர உறுப்பினர் பதவிக்காக ஒரு பில்லியன் டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது, இது பணக்கார நாடுகளுக்கான சங்கமாக மாறுவதை காட்டுகிறது என்றும், அத்தகைய சங்கங்கள் எவ்வாறு செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐநா சபைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் மலீஹா லோதி, இந்த முடிவை விவேகமற்றது என விமர்சித்துள்ளார். ட்ரம்ப் எடுக்க உள்ள ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவும் சட்டப்பூர்வ அங்கீகாரமும் பெறுவதற்காகவே இந்த அமைதி வாரியம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாஹித் ஹுசைன், இஸ்லாமாபாத் அவசரமாக முடிவு எடுத்துவிட்டதாக கூறியுள்ளார். சமூக ஆர்வலர் அம்மார் அலி ஜான், இதை ஆட்சியாளர்களின் வெட்கக்கேடான துரோகம் என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான பாத்திமா பூட்டோ, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்ட இஸ்ரேலுடன் ஒரே அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் அமருவது எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பி, இது நாட்டுக்கு பெரும் அவமானம் என பதிவிட்டுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

கடல் பாதுகாப்பில் புதிய யுகம் – ரஃபேலிடமிருந்து Ice Breaker ஏவுகணையை பெறும் இந்தியா

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் திரண்ட பெருந்திரள் – மக்கள் பேரலையில் திளைத்த மதுராந்தகம்

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் திரண்ட பெருந்திரள் – மக்கள் பேரலையில் திளைத்த மதுராந்தகம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

மே 1, 2026
குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

மே 1, 2026
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

மே 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!
  • குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!
  • வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

மே 1, 2026
குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

மே 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN