• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மே 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

கடல் பாதுகாப்பில் புதிய யுகம் – ரஃபேலிடமிருந்து Ice Breaker ஏவுகணையை பெறும் இந்தியா

athibantv by athibantv
ஜனவரி 24, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.6K 📋

கடல் பாதுகாப்பில் புதிய யுகம் – ரஃபேலிடமிருந்து Ice Breaker ஏவுகணையை பெறும் இந்தியா

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரஃபேல் நிறுவனத்திடமிருந்து Ice Breaker குரூஸ் ஏவுகணையை வாங்க இந்திய விமானப்படை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவு, இந்தியாவின் கடல் பாதுகாப்பு வியூகத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related posts

பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

மே 1, 2026
“எங்கும் தாமரை மலர்கிறது”: கருத்துக்கணிப்பு முடிவுகளால் உற்சாகமடைந்த பாஜக – ஷெசாத் பூனாவாலா நம்பிக்கை!

“எங்கும் தாமரை மலர்கிறது”: கருத்துக்கணிப்பு முடிவுகளால் உற்சாகமடைந்த பாஜக – ஷெசாத் பூனாவாலா நம்பிக்கை!

ஏப்ரல் 30, 2026

சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்தியா முழுமையான பாதுகாப்புத் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது.

இந்த சூழலில், இந்திய-பசிபிக் கடல் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த Ice Breaker குரூஸ் ஏவுகணைகளைப் பெற இந்தியா திட்டமிட்டுள்ளது.

சுமார் 4 மீட்டர் நீளமும், 400 கிலோகிராமுக்கு குறைவான எடையும் கொண்ட இந்த ஏவுகணை, 250 பவுண்ட் வெடிபொருள்களை ஏற்றிக் கொண்டு, 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் பெற்றதாகும்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகத் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் Ice Breaker, முழுமையாக தானியங்கி முறையில் செயல்படக்கூடியதாக இருந்தாலும், தேவையான நேரங்களில் கடற்படையினர் அதன் பாதையை மாற்றும் வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, Very Low Observable தொழில்நுட்பத்தின் மூலம், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும், Electro-Optical Seeker மற்றும் AI அடிப்படையிலான இலக்கு அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் சரியான இலக்குகளை மட்டும் தாக்கும் தனிச்சிறப்பும் Ice Breaker ஏவுகணைக்கு உள்ளது. குறிப்பிடத்தக்க அம்சமாக, GPS இல்லாமலேயே செயல்படக்கூடிய திறன் இதில் உள்ளது.

அனைத்து வானிலை சூழ்நிலைகளிலும், மின்னணு போர் நிறைந்த கடினமான சூழல்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய இந்த Ice Breaker ஏவுகணையை இந்திய விமானப்படை தனது படை வலுவில் இணைக்க உள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஏற்ப, Ice Breaker ஏவுகணையின் சில வகைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க, பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், ரஃபேல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமெரிக்காவிலிருந்து 24 MH-60R ‘ரோமியோ’ சீ ஹாக் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டபோது, அவற்றுடன் AGM-114 Hellfire ஏவுகணைகள் மற்றும் Mk-54 இலகுரக டார்பிடோக்கள் வாங்கவும் இந்தியக் கடற்படை முடிவு செய்திருந்தது.

அமெரிக்கக் கடற்படையில் பயன்படுத்தப்படும் Kongsberg Naval Strike Missile சுமார் 407 கிலோகிராம் எடை கொண்டதால், நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு தாக்குதலுக்கான அந்த ஏவுகணையை வாங்க இந்தியா விரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து, குறைந்த எடையும் அதிக திறனும் கொண்ட ஏவுகணைகளை தேடிய இந்தியக் கடற்படை, Ice Breaker ஏவுகணையைத் தேர்வு செய்துள்ளது.

MH-60R ஹெலிகாப்டர்களில் இருந்து மறைந்தபடி தாக்கும் திறன் கொண்ட, 300 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய Ice Breaker குரூஸ் ஏவுகணையை இணைப்பது, இந்தியக் கடற்படையின் தாக்குதல் ஆற்றலை மேலும் உயர்த்தும் என மதிப்பிடப்படுகிறது.

மேலும், சுமார் 380 கிலோகிராம் எடையும், 55 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறனும் கொண்ட இந்தியாவின் குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளுடன் Ice Breaker-ஐ இணைக்க DRDO திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

சிறுமியின் அன்புக்கு நெகிழ்ந்து நன்றி கூறி உறுதி அளித்த பிரதமர் மோடி

Next Post

காசா அமைதி வாரியத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் – நாட்டுக்குள் வெடித்தெழும் எதிர்ப்பு

Next Post

காசா அமைதி வாரியத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் – நாட்டுக்குள் வெடித்தெழும் எதிர்ப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

மே 1, 2026
பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

மே 1, 2026
டிஜிட்டல் இந்தியாவில் இமாலய சாதனை: 10 ஆண்டுகளை நிறைவு செய்த யுபிஐ – ரூ. 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

டிஜிட்டல் இந்தியாவில் இமாலய சாதனை: 10 ஆண்டுகளை நிறைவு செய்த யுபிஐ – ரூ. 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

மே 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!
  • பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!
  • டிஜிட்டல் இந்தியாவில் இமாலய சாதனை: 10 ஆண்டுகளை நிறைவு செய்த யுபிஐ – ரூ. 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

மே 1, 2026
பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

மே 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN