கேரளாவில் யூடியூபர் செயலால் இளைஞர் தற்கொலை – சம்பவம் விசாரணையில்

Date:

கேரளாவில் யூடியூபர் செயலால் இளைஞர் தற்கொலை – சம்பவம் விசாரணையில்

கேரளாவில் பேருந்தில் பாலியல் தொடர்பான தவறான காட்சிகள் இடம்பெற்றதாக உருவான ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி, அதன்பிறகு ஒருவர் தற்கொலை செய்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த யூடியூபர் ஷிம்ஜிதா போலீசார் கைது செய்துள்ளனர்.

கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக், ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த 16-ஆம் தேதி பணி காரணமாக கண்ணூர் நோக்கி பேருந்தில் பயணம் செய்தார்.

அந்த பயணத்தில், தீபக்கின் பாலியல் சம்பந்தப்பட்ட சம்பவத்தை யூடியூபர் ஷிம்ஜிதா வீடியோவாக வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோவில் தீபக்கின் தனிப்பட்ட காட்சிகள் தவறாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியதன் காரணமாக, தீபக் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்.

நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை கண்டுபிடித்து, தீபக் எதையும் தவறாகச் செய்யவில்லை என்றும், வீடியோவை புகழுக்காக வெளியிட்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.

யூடியூபர் ஷிம்ஜிதா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவான நிலையில் இருந்த அவரை போலீசார் கைது செய்து கோழிக்கோட்டையில் விசாரணைக்காக அழைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தான் காபூலில் சீனர்கள் குறிவைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் காபூலில் சீனர்கள் குறிவைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்,...

மோடியின் அழைப்பில் அமீரக அதிபர் 3 மணி நேர இந்திய வருகை – முக்கிய பின்னணி

மோடியின் அழைப்பில் அமீரக அதிபர் 3 மணி நேர இந்திய வருகை...

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம்

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம் கரூர் கூட்ட நெரிசல்...

தொட்டபெட்டாவில் இமயமலை ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ச்சி

தொட்டபெட்டாவில் இமயமலை ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ச்சி உதகை மாவட்டம், தொட்டபெட்டா மலை சிகரத்தில்...