மத்திய அரசின் விரைவு நடவடிக்கை – ஈரானில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பும் இந்தியர்கள்

Date:

மத்திய அரசின் விரைவு நடவடிக்கை – ஈரானில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பும் இந்தியர்கள்

மத்திய அரசின் துரிதமான மற்றும் தீவிர நடவடிக்கைகளின் பயனாக, போர் பதற்றம் நிலவி வரும் ஈரானில் இருந்து இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பி வருகின்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் மோதல்கள், அதனுடன் இணைந்த உள்நாட்டு கலவரங்கள் காரணமாக அந்நாட்டில் கடுமையான அசாதாரண நிலை உருவாகியுள்ளது.

விலைவாசி உயர்வு, பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் வணிகர்கள், தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஈரானில் நிலவும் சூழல் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடர் வன்முறை மற்றும் கலவர சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சுறுத்தலான சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த இந்தியர்கள், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கோலாகலமாக கொண்டாடப்பட்ட பட்டம் பறக்கும் திருவிழா

கோலாகலமாக கொண்டாடப்பட்ட பட்டம் பறக்கும் திருவிழா குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பட்டம் பறக்கும்...

சீனாவில் நோரோ வைரஸ் தாக்கம் – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு

சீனாவில் நோரோ வைரஸ் தாக்கம் – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு சீனாவில்...

காணும் பொங்கல் கோலாகலம் – தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

காணும் பொங்கல் கோலாகலம் – தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் திரண்ட...

உழவர் திருநாளிலும் போதையைப் பரப்பியதாக அறிவாலய அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

உழவர் திருநாளிலும் போதையைப் பரப்பியதாக அறிவாலய அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு உழவர்...