• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஜூன் 9, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

உலகை இணைத்த பாரதத்தின் கடல்சார் மரபு – கௌண்டின்யா பாய்மரக் கப்பல் பயணம் : பழமையான கடல் வழித்தடங்களுக்கு புதிய உயிர்ப்பு

athibantv by athibantv
ஜனவரி 5, 2026
in Bharat, Big-News
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

உலகை இணைத்த பாரதத்தின் கடல்சார் மரபு – கௌண்டின்யா பாய்மரக் கப்பல் பயணம் : பழமையான கடல் வழித்தடங்களுக்கு புதிய உயிர்ப்பு

தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, கடலைத் தாண்டி பயணித்து முதல் இந்து அரசாட்சியை நிறுவிய கௌண்டின்யா முனிவரின் நினைவாக, அவரது பெயரைத் தாங்கிய ஒரு பாரம்பரிய கப்பல் மீண்டும் கடலோடி தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதன் பின்னணி மற்றும் முக்கியத்துவம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பு விளக்குகிறது.

பண்டைய காலத்தில் இந்தியர்கள் கப்பல்களை முழுமையாக மரத்தையும் பாய்மரங்களையும் பயன்படுத்தியே உருவாக்கினர். நூற்றாண்டுகளாக மறைந்திருந்த அந்த பாரம்பரிய கப்பல் கட்டும் நுட்பத்தை, மத்திய பாதுகாப்புத் துறை இப்போது மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

Related posts

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஜூன் 8, 2026
அடங்க மறுக்கும் ஈரான் – இஸ்ரேல்: போரைத் தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப்! (சிறப்புத் தொகுப்பு)

அடங்க மறுக்கும் ஈரான் – இஸ்ரேல்: போரைத் தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப்! (சிறப்புத் தொகுப்பு)

ஜூன் 8, 2026

ஒரு காலத்தில் பரந்த பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்த கலிங்க தேசத்தில், முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கௌண்டின்யா முனிவர். இந்தியாவிலிருந்து வங்கக் கடலைக் கடந்து, இன்றைய வியட்நாம்–கம்போடியா பகுதிகளுக்குச் சென்ற முதல் இந்திய கடலோடியாக அவர் கருதப்படுகிறார்.

அந்நாட்டின் அரசகுமாரியை திருமணம் செய்து, “ஃபுனான்” என்ற பெயரில் உலகின் முதல் இந்து அரசை நிறுவிய பெருமையும் கௌண்டின்யாவுக்கே உரியது.

அஜந்தா குகை ஓவியங்களில் இடம்பெற்றுள்ள கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பண்டைய கப்பலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய காலத்தில் மீண்டும் உருவாக்கப்பட்டதே இந்த கௌண்டின்யா பாய்மரக் கப்பல். இதில் எங்கும் இரும்பு, ஸ்டீல் அல்லது ஆணிகள் பயன்படுத்தப்படவில்லை என்பதே இதன் தனித்தன்மை. வெல்டிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் இதில் இல்லை.

முழுமையாக இந்திய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட, சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கப்பல் கட்டுமான முறைகளைக் கொண்டு இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இது “கட்டப்பட்ட” கப்பல் அல்ல; “தைக்கப்பட்ட” கப்பல் எனலாம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ்வி தாரிணி போன்ற பயிற்சி மற்றும் பயணக் கப்பல்களை உள்ளடக்கிய இந்தியக் கடற்படையின் பாய்மரக் கப்பல்கள் தொகுப்பில், ஐஎன்எஸ்வி கௌண்டின்யாவும் ஒரு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைஞர்கள் குழு, தலைமை கப்பல் கட்டுமான வல்லுநர் பாபு சங்கரன் தலைமையில், இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளது.

நவீன கப்பல்களில் இருப்பது போல் திசை நிர்ணயிக்கும் இயந்திரங்கள் இதில் இல்லை. நீண்ட துடுப்புகள் மூலம் இயக்கப்படும் இந்தக் கப்பல், சதுர வடிவ பருத்தி பாய்மரங்களை பயன்படுத்தி முன்னே செல்கிறது.

காற்றின் திசை, கடல் ஓட்டம் மற்றும் நட்சத்திரங்களின் நிலை போன்ற இயற்கை அடையாளங்களை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு, இந்தக் கப்பல் தனது பயணத்தை மேற்கொள்கிறது.

கௌண்டின்யா முனிவரின் பெயரைச் சுமந்து செல்லும் இந்தக் கப்பல், குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்திலிருந்து, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரை நோக்கி கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி தனது முதல் கடல் பயணத்தை தொடங்கியது.

இந்தியாவின் செழுமையான கடல்சார் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சியை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த கப்பலை உருவாக்கிய வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், கப்பல் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் இந்திய கடற்படையினரின் அர்ப்பணிப்பை புகழ்ந்துள்ளார். மேலும், வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கப்பாலான பகுதிகளுடன் இந்தியாவுக்கிருந்த வரலாற்றுத் தொடர்புகளை இது மீண்டும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டை கடலில் கொண்டாடிய ஐஎன்எஸ்வி கௌண்டின்யா, இரும்புக் கப்பல்கள் அல்லது நவீன வழிநடத்தும் கருவிகள் உருவாகுவதற்கு முன்பே இந்திய கடலோடிகள் பயணித்த பாதைகளில் சென்று, தனது வாழ்த்துகளையும் புகைப்படங்களையும் பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைத்திருந்த பண்டைய கடல்வழிகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாகவே இந்தப் பயணம் அமைந்துள்ளது என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

உண்மையில், ஐஎன்எஸ்வி கௌண்டின்யாவின் இந்தப் பயணம், கடல்களை வென்று உலகின் பல பகுதிகளில் சென்று குடியேறி ஆட்சி செய்த பாரத முன்னோர்களுக்கு செலுத்தும் ஒரு மரியாதை அஞ்சலியாகும்.

கடலைக் கடப்பதும், தேவையெனில் போரிடுவதும், அதைவிட முக்கியமாக மக்களின் மனங்களை வெல்வதும் தான் உலகத்துடன் இந்தியா கொண்டிருந்த உறவு என்பதையே கௌண்டின்யா முனிவரின் வாழ்க்கை எடுத்துரைக்கிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

அமெரிக்காவின் கைப்பற்றலில் சிக்கிய வெனிசுலா அதிபர் – நிக்கோலஸ் மதுரோ யார்? முழு பின்னணி

Next Post

27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணை அடையும் திருச்சிலைகள்!

Next Post

27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணை அடையும் திருச்சிலைகள்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

ஜூன் 8, 2026
பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

ஜூன் 8, 2026
ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஜூன் 8, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!
  • பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!
  • ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

ஜூன் 8, 2026
பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

ஜூன் 8, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN