திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு – பக்தர்கள் வெள்ளம்

Date:

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு – பக்தர்கள் வெள்ளம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

“பூலோக வைகுண்டம்” என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19ஆம் தேதி ஆரம்பமானது. பகல் பத்து உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை சிறப்பாக நடந்தேறியது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “ரங்கா ரங்கா, கோவிந்தா கோவிந்தா” என பக்தி முழக்கமிட்டு, இறைவனை தரிசனம் செய்தனர்.

பரமபத வாசல் திறப்பை ஒட்டி, ரத்தின ஆடை, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட அலங்காரங்கள் அணிவிக்கப்பட்ட நிலையில், மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட ரங்கநாதர், பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் ஆனந்த பரவசத்துடன் பரமபத வாசல் வழியாக சென்று வழிபாடு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கத் தேர் பவனி!

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கத் தேர் பவனி! வைகுண்ட...

நேபாளத்தில் முன்னாள் ராப் இசைக்கலைஞர் பலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு

நேபாளத்தில் முன்னாள் ராப் இசைக்கலைஞர் பலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு நேபாளத்தில்...

சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை

சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை சென்னை காமராஜர்...

இனி ஒரு நாள் 25 மணிநேரம்? – விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு தகவல்

இனி ஒரு நாள் 25 மணிநேரம்? – விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு...