பனிப்புயல் தாக்கம் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் கடுமையான பாதிப்பு – 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

Date:

பனிப்புயல் தாக்கம் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் கடுமையான பாதிப்பு – 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் ‘டெவின்’ (Devin) எனப் பெயரிடப்பட்ட பனிப்புயல் கடுமையாக தாக்கி வருவதால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் கனமழையுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமான பனிப்பொழிவால் சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போதிய வெளிச்சமின்மை மற்றும் வழுக்கலான சாலைகள் காரணமாக விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மோசமான வானிலை சூழல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 7,000 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

பனிப்புயலால் மின் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அவசர சேவைகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பனிப்புயலை எதிர்கொண்டு வரும் நியூயார்க், நியூஜெர்சி மாகாண நிர்வாகங்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. பனி அகற்றும் வாகனங்கள் சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன. அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பனிப்புயலின் தாக்கம் இன்னும் சில நாட்கள் தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொரோனா பெருந்தொற்றின்போது சேவையாற்றிய மருத்துவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நன்றி

கொரோனா பெருந்தொற்றின்போது சேவையாற்றிய மருத்துவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நன்றி கொரோனா பெருந்தொற்றுக்...

சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிய வகை மரங்கள், மூலிகைகள் சேதம்

சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிய வகை மரங்கள்,...

கோவை: பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் உயிரிழப்பு – கணவன் கண்முன்னே நேர்ந்த கோர விபத்து

கோவை: பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் உயிரிழப்பு –...

இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி...