உசிலம்பட்டியில் சரத்குமார், பொன்ரா வெகு உற்சாக வரவேற்பு!
மதுரை உசிலம்பட்டியில் வெளியான கொம்புசீவி படத்தின் இயக்குநர் பொன்ராமையும் நடிகர் சரத்குமாரையும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவான இந்த படம் கடந்த 19ம் தேதி வெளியாகி, பொன்ராமின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் திரையிடப்பட்டது. வருகை தந்த நடிகர்களுக்கு மேள தாளம் முழங்கிய பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சரத்குமார், கொம்புசீவி திரைப்படத்தின் மூலம் நல் கருத்துகளை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைந்ததாகப் பேசினார்.